பாட் அதிநவீன வசதிகள் கொண்ட ஓட்டல்..

by Editor / 18-11-2021 03:44:10pm
பாட் அதிநவீன வசதிகள் கொண்ட  ஓட்டல்..

 

நாட்டில் முதல்முறையாக மும்பை ரெயில் நிலையத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட பாட் ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.
 
நம் நாட்டில் முதல்முறையாக மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பாட் ஓட்டல் திறக்கப்பட்டது. ரெயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஓட்டலை திறந்து வைத்தார்.

ரெயில் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே ஒரு நபர் மட்டும் வசதியாக படுத்து ஓய்வெடுக்க கூடிய சிறிய மற்றும் கேப்ஸ்யூல் வடிவிலான அறைகளே, பாட் ஓட்டல் என அழைக்கப்படுகின்றன.

இந்த பாட் ஓட்டலில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. குளிர்சாதன வசதி, டி.வி., சொகுசான படுக்கைகள், வை - பை இணைய சேவை, மொபைல் போன் சார்ஜர், சிறிய பாதுகாப்பு பெட்டகம், புத்தகம் படிக்கும்விளக்கு ஆகியவை உள்ளன.

இங்கு தங்குபவர்களுக்கு பொதுவான கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் 12 மணி நேரம் தங்குவதற்கு 999 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு ஆயிரத்து 999 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via