முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத்

by Editor / 08-12-2021 07:19:53pm
முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத்

 

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்டு பள்ளியில், ஆரம்ப கால படிப்பை முடித்த பிபின் ராவத், ராணுவத்தின் மீதான ஆர்வத்தால், கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார் வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார்.
பின்னர் 1978-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார்.
பின்னர் 1978-ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார்.

நம் நாட்டில் இப்போது ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாக தளபதிகள் உள்ளனர். இந்நிலை யில், கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் நமது ராணுவம் வெற்றி பெற்றது. எனினும், இந்தப்போரின்போது முப்படைகளை ஒருங்கிணைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு, வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரை வழங்கியது. இந்நிலையில், ராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற 2 நாட்களுக்கு முன்பு பிபின்ராவத் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டார்.பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via