கோவில்பட்டி அருகே தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது.சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

by Editor / 19-06-2024 07:27:00am
கோவில்பட்டி அருகே தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது.சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாய், இவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் குமார், சோலை ராஜ், கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் சேர்ந்து அடித்துக் கொண்டு தரதரத்வென தெருவில் இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து செல்லத்தாய் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், போலீசார் செல்லத்தாய் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த தெருநாய் பலரையும் கடித்ததால் அடித்து கொன்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு 3 பேரின் நண்பரான கூசாலிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் எப்படி என் நண்பர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறி செல்லத்தாய் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை வாளை கொண்டு உடைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்லத்தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : கோவில்பட்டி அருகே தெரு நாயை அடித்து கொன்ற 3 பேர் கைது.சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Share via