பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.

by Editor / 12-12-2021 03:31:14pm
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். 

 இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ட்விட்டர் நிறுவனத்துக்கு தெரிவிகக்ப்பட்டது. பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிரதமரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கான @narendramodi உடனடியாக பாதுகாக்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் ( PMO India) பின்னர் ஒரு ட்வீட்டில் தெரிவித்தது. பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் அதில் பதிவிடப்பட்ட பதிவுகளை புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via