புத்தாண்டு சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: சங்கர் ஜிவால்

by Editor / 30-12-2021 01:45:41pm
புத்தாண்டு சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: சங்கர் ஜிவால்

 நாளை நள்ளிரவு புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஈசிஆர், மெரினா உள்ளிட்ட முக்கிய பொழுது போக்கு சுற்றுலாத்தலங்களில் ம்ஸட்டுமின்றி மக்கள் அதிகம் கூடுமிடங்களில் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் கூறினார். 

டிசம்பர் 31 ஆம் தேதி அன்று இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நீண்ட தூர பயணத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து,  ரயிலிலும், பேருந்திலும் பயணிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via