ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பெட்ரோல் டீசல் செலுத்துபவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு

by Editor / 01-01-2022 02:34:46pm
ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பெட்ரோல் டீசல் செலுத்துபவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு

2022 ஆம் ஆண்டு இன்று பிறந்ததை முன்னிட்டு இந்த  புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பாரத் பெட்ரோல் வாங்கி ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பெட்ரோல் டீசல் செலுத்துபவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைப்பு செய்யப்படுவதற்கு வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் திரண்டு வந்து பெட்ரோல், டீசல், நிரப்பி சென்றவண்ணம் உள்ளனர்.

 பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ள சூழலில் ராசிபுரம்-சேலம் சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கின் விலை குறைப்பு செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் வாகன ஓட்டிகள் ஆயிரம் ரூபாய் வரை தனககளது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு சென்றவண்ணம் உள்ளனர்.சாதாரண தொழிலாளர்கள்,வாகன உபயோகம் அதிகமுள்ளவர்கள்  500 ரூபாய் அளவுக்கும் பெட்ரோலை வாகனங்களுக்கு  செலுத்தி கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

 

Tags :

Share via