சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும் - முதல்வர் பேச்சு.

by Writer / 08-01-2022 11:57:08am
சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும் - முதல்வர் பேச்சு.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, நீட் தேர்வு விவகாரத்தில் சட்டசபையின் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும் எனவும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது மக்களாட்சியின் தத்துவம் என பேசினார்.

மேலும், இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் முக்கிய இலக்கு என்பது நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என அவர் பேசினார்.

 

Tags :

Share via