தமிழகத்தில் மே 10 - 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு!

by Editor / 08-05-2021 08:57:06am
தமிழகத்தில் மே 10 - 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வரும் 10 ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கும்.

2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via