நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..?

by Editor / 17-01-2022 10:42:08pm
நாளை  மறுநாள்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது  குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நாளை  மறுநாள்  காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. 

 தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 2021 ஆண்டு நடைபெற்றது.இதனை தொடர்ந்து  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று நடக்குமென அரசியல் கட்சியினர் ஆவலோடு உள்ளனர்.இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது கட்சியினரிடம் நேர்காணலை நடத்திவருகின்றனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் தொடர்ச்சியாக நாளை  மறுநாள் ஜனவரி 19ஆம் தேதி காலை 11.30 மணியளவில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக நாளை  மறுநாள்  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via