லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து தந்தை மகன் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

by Admin / 31-01-2022 03:45:03pm
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து தந்தை மகன் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

சென்னையை அடுத்துமண்ணிவாக்கத்தில்  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை மகன் மற்றும் மகள் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் பூந்தமல்லி செல்லும் புறவழி சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

அந்த இரு சக்கர வாகனத்தில் இளைஞர் மற்றும் இருவர் பயணித்த நிலையில் விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாரணையில் உயிரிழந்தது தந்தை மற்றும் மகன் மகள் என்பதும்  அவர்கள் கோவளம் கடற்கரைக்கு சென்று வீடு திரும்பும் போது விபத்து நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via