நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வடமாநில கொள்ளையன் கிராம மக்கள் அடித்து உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி

by Editor / 09-08-2022 12:26:42pm
நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட வந்த வடமாநில கொள்ளையன் கிராம மக்கள் அடித்து உதைத்ததில்  சம்பவ இடத்திலேயே பலி

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டில் திருட வந்த வடமாநில கொள்ளையன் கிராம மக்கள் அடித்து உதைத்த இடத்திலே உயிரிழந்தான். கெட்டன மல்லி கிராமத்தில் 80 வயதான மூதாட்டி தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்கு வந்த மூன்று வடமாநிலத்தவர்கள் வெளியே படுத்திருந்த மூதாட்டியின் தலையில் தாக்கி விட்டு உள்தாள் பாளை  உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டு மூவரையும் பிடிக்க முயன்று உள்ளனர் .அதில் இருவர் தப்பி ஓடிய நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளத்தில் ஒளிந்திருந்த கொள்ளையானை  கிராம மக்கள் ஆத்திரத்தில் அடித்து உதைத்துதில் அந்த நபர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via