மாணவியை அடித்த ஆசிரியையின் ஆடையை கிழித்த உறவினர்கள்
மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழகிழமை வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். மறுநாள் வகுப்புக்கு வந்த மாணவியை ஆசிரியை விடுமுறைக்கான காரணத்தைக்கேட்டு கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி கோபத்தில் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியை தாக்கியுள்ளனர். மேலும் ஆசிரியையின் ஆடைகளையும் கிழித்துள்ளனர். இது பற்றி காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் புகார் அங்கு வந்த செய்யவே காவல்துறையினர் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
Tags : Relatives tore the clothes of the teacher who beat the student