சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட இருவரிடமிருந்து 16 லட்ச ரூபாய் பறிமுதல்

by Admin / 31-01-2022 04:07:51pm
சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட இருவரிடமிருந்து 16 லட்ச ரூபாய் பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரியல் எஸ்டேட்  தொழிலில் ஈடுபட்ட இருவரிடமிருந்து 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சூரமங்கலம்  பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த 10 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்த சிவக்குமார் என்பதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

அதுபோல சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 6 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பதும் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via