பணத்திற்காக கொலை செய்த தம்பதியை கைது செய்த போலீசார்!
கோவையில் கால்டாக்சி ஓட்டுனர் உயிரிழந்த விவகாரத்தில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓணாப்பாளையம் பகுதியில் தனியார் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததை தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்சியில் பயணித்தது தெரிய வர அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது திடுக்கிடும் விதமாக பணத்திற்காக தனது மனைவியுடன் இணைந்து கட்டையால் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து தம்பதியை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பணம், லேப்டாப் மற்றும் 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
Tags :