கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

by Admin / 24-07-2021 07:23:37am
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் முதல் அமைச்சர் சந்திப்பிற்கு பின் பேட்டி அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo