கணவனை காப்பற்ற போதைப்பொருள் விற்ற மனைவி கைது

by Editor / 18-06-2022 05:03:59pm
கணவனை காப்பற்ற போதைப்பொருள் விற்ற மனைவி கைது

பெங்களூருவில் சிறையில் இருக்கும் கணவனை ஜாமினில் எடுக்க, போதைப்பொருள் விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.டான்ஜானியா நாட்டைச் சேர்ந்த பாத்திமா ஒமேரி, 2018ம் ஆண்டு பெங்களூருவில் குடியேறினார். மஹாதேவபுரத்தில் கணவருடன் அவர் வசித்து வந்த நிலையில், போதைப்பொருள் விற்ற வழக்கு தொடர்பாக பாத்திமாவின் கணவர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், கணவனை ஜாமினில் எடுப்பதற்கும், வழக்கறிஞருக்கு பணம் கொடுப்பதற்காகவும் பாத்திமா, போதைப்பொருள் விற்பனையை கையில் எடுத்தார். இதையறிந்த போலீசார் பெண்ணை கைது செய்து, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via