சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள்

by Staff / 08-12-2022 05:15:17pm
சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள்

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் 41 பேரை   ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி  வைத்தனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை  மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். குமாரபாளையம் ஜெட் திருமண மண்டபத்தில்  இருந்து சபரிமலை சேவைக்கு பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர்  கல்லூரி மாணவர்கள்  41 பேர், 31வது ஆண்டாக, சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.  ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறியதாவது:
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தாரை அவரது உடலை சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் தூய்மை படுத்தும் பணி செய்தல், என்பது உள்ளிட்ட பணிகள் செய்வார்கள். 4ம் கட்டமாக பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர்  கல்லூரி மாணவர்கள்  41 பேர், 11 நாட்கள் சேவை செய்து திரும்புவார்கள். அதன் பின் அடுத்த குழுவினர் செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் மாதவன், ராமகிருஷ்ணன், அருணாராணி,மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

 

Tags :

Share via