மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கில் பிரபல ரௌடி வெள்ளைக்காளி கைது.

மதுரையில் திமுக பிரமுகர் வீ.கே.குருசாமி தரப்புக்கும், வெள்ளைக்காளி தரப்பினர் இடையே உள்ள மோதல்போக்கால் 21 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ‘கிளாமர்’ காளி என்ற காளீஸ்வரன் (32) கடந்த மார்ச் 22ஆம் இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் பிரபல ரௌடி வெள்ளை காளியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் வெள்ளை காளியின் தாயார் ஜெயக்கொடி (65) மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தெப்பக்குளம் பங்கஜம்காலனி பகுதியை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவரும் என்கவுண்டர் செய்யப்பட்டார்
இதனிடையே கிளாமர் காளி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது புழல் சிறையில் உள்ள பிரபல ரௌடி வெள்ளை காளியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரை மதுரை மாவட்ட காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே விசாரணக என்ற பெயரில் வெள்ளைக்காளி அழைத்துவந்து காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் மீது வெள்ளைககாளி குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்பிவருகின்றனர்.
Tags : மதுரையில் கிளாமர்காளி கொலை வழக்கில் பிரபல ரௌடி வெள்ளைக்காளி கைது.