வயநாட்டில் 25 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி

by Editor / 09-06-2026 12:20:59pm
வயநாட்டில் 25 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி

கேரளம் மாநிலத்தின் வயநாட்டில் 25 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 337 மாணவர்கள் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். கனமழையால் தொற்றுநோய்கள் பரவி வருவதாகவும், அசுத்தமான உணவு, நீர் மூலம் நோய்கள் அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு நோய்களுக்காக சிகிச்சை பெற்றனர். அந்த மாநிலத்தில் இதுவரை 85 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

 

Tags :

Share via
Logo