சந்திரயான் 3-க்கு பெருமை சேர்த்த நாமக்கல் மண்

by Staff / 23-08-2023 05:30:20pm
சந்திரயான் 3-க்கு பெருமை சேர்த்த நாமக்கல் மண்

தமிழகத்தின் நாமக்கல் மாவட்ட மண் இன்று சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. நிலவில் லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ள மண் தேவைப்பட்டது. முந்தைய திட்டங்களின் போது, அந்த மண் அமெரிக்காவின் நாசவிடம் இருந்து ஒரு கிலோ ரூ.15,000 கொடுத்து வாங்கியது. இந்த சூழலில், இந்தியாவில் அந்த வகை மண் உள்ளதா? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர். அதன்படி, நாமக்கல் சித்தம்பூண்டி, குன்னமலை பகுதிகளில் இஸ்ரோ 2012ஆம் ஆண்டில் முதல் முறையாக 50 டன் மண்ணைச் சேகரித்தது. 2019ஆம் ஆண்டில், சந்திரயான் 2 திட்டத்திற்கு அதே மண்ணைக் கொண்டு சோதனை செய்தது. இதே மண் சந்திரயான் 3 இல் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via