இளம்பெண்ணை மூவர் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்

by Staff / 20-10-2023 03:49:33pm
இளம்பெண்ணை மூவர் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்

உத்திர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை அவரது நண்பர் மணீஷ் சர்மா வரவேற்று ஜான்கிபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளார். கடந்த புதன்கிழமை மனிஷ் ஷர்மா தனது நண்பர்கள் அபிஷேக், துக்காராம் ஆகியோருடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதே விடுதிக்கு வந்தனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணை மூவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஜான்கிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via