முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு

by Editor / 07-05-2022 10:20:58pm
 முதல்வருடன் ஆதீனங்கள் சந்திப்பு

வரும் 22-ம் தேதி தான் தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நிகழ்வு குறித்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.
இந்த நிலையில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் இன்று முதலமைச்சர் .ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

 

Tags :

Share via