கல்குவாரியில் மிதந்த ஆண் சடலம்
நெல்லை அருகே கல்குவாரியில் கல்லால் கட்டப்பட்ட நிலையில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னீர் பள்ளம் அருகே கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில இறந்தவர் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பதும் இவருக்கும் நெல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்ப்பு இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :