பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைக்கு தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்

by Editor / 20-02-2022 08:37:27am
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைக்கு தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 2 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். 1304 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரஸ் ,பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுவதால் பலமுறை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது மேலும் காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு  தொடங்கியுள்ளது.

 

Tags : பஞ்சாப் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுது.

Share via