பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி

by Editor / 24-02-2022 04:01:31pm
 பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் கணேஷ்பாபு இவருக்கு சொந்தமான செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு கம்பெனி இயங்கி வருகிறது. இதில் உள்ள ஒரு அறையில் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட முழுவதுமாக சேதமடைந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிடத்தில் பணியாற்றிய  தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags : Terrible fire at firecracker factory building collapses, 4 killed

Share via