மனைவி ,மகளை கத்தியால் குத்திய ஏட்டு சரண்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்.சென்னை தலைமைச் செயலக பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 3 மகள்கள் உள்ள நிலையில் இவரது மனைவி பூர்ணிமாவிற்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில் ராஜேந்திரன் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார்,
23ஆம் தேதி காலை மனைவியிடம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து கையெழுத்துபோடுமாறு கூறியுள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து மனைவியிடம் சண்டை போட்டு சென்று ராஜேந்திரன் மதியம் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்,வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் இடது கை மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார் ,தடுக்க வந்த 10 வகுப்பு படிக்கும் மகள் பத்மினியையும் அவர் ஆத்திரத்தில் குத்தியதில் பத்மினி மற்றும் பூர்ணிமாவின் அலறல் சத்தம் கேட்டு கீழிருந்த அக்கம்பக்கத்தினர் மேலே சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் கிடந்த நிலையில் ராஜேந்திரன் தப்பி ஓடியுள்ளார்.இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு ராஜேந்திரன், பின்னர் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : Edu Charan, who stabbed his wife and daughter