கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பிணமாக மீட்பு

by Admin / 04-03-2022 05:52:30pm
 கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றவர் பிணமாக மீட்பு

உசிலம்பட்டி கீழப்புதூரை சேர்ந்தவர் எஸ்.பி. அல்லிக்கொடி. இவர் காய்கறி கமிஷன் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் கடன் பிரச்சனை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் இவரது உறவினர்கள் இவரை சுற்றுவட்டார பகுதியில் தேடியுள்ளனர். இதனையடுத்து சந்தை திடலில் உள்ள வேளாண்மை துறை அலுவலகம் பின்புறம் பிணமாக கிடந்த அல்லிக்கொடியை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via