உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்.
உக்ரைனில் அமைதி திரும்ப ரஷ்யா, உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பிற்காக மக்கள் அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களின் நிலை பற்றி கவலை தெரிவித்த காங்கிரஸ் கட்சி, போர் மூண்ட உக்ரைனிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் வளைகுடா போரின் போது, லெபனான், லிபியா , ஈராக் நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானத்திற்கு வரவலியுறுத்தியுள்ளது.
Tags :