வேலூரில் சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து

by Admin / 12-03-2022 11:15:25am
வேலூரில் சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து.

சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி  சிமெண்ட் ஜல்லி கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

அந்த லாரி சென்னை ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் இறங்கியது.

அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த சலவை இயந்திரம் பாரம் தாங்காமல் தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது அப்படியே கவிழ்ந்து.

இந்த விபத்தில் ஆட்டோ பெண் பயணி மற்றும் ஓட்டுநர் ஆகியோர்படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via