ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை

by Admin / 13-03-2022 01:24:09pm
ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி துனி ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
 
துனி ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் ரயிலை எதிர்பார்த்தப்படி அங்கும் இங்கும் நடந்துள்ளார். காலை நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

அப்போது திடீரென இளைஞர் தண்டவாளத்தில் குதித்து அதிவேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via