OYO ஹோட்டல் மேலாளர் தற்கொலை

by Staff / 18-04-2023 12:27:27pm
OYO ஹோட்டல் மேலாளர் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் குஷாம்காஷ் கிராமத்தை சேர்ந்த சச்சின் சிங் (30) என்பவர் மல்லப்பூரில் வாடகை அறையில் வசித்து வருகிறார். சச்சின் சிங், தெலங்கானாவின் மல்காஜிகிரி மாருதிநகரில் உள்ள சாய் மேன்சன் ஓயோ ஹோட்டலில் மேலாளராக மூன்று மாதங்களாக பணியாற்றி வந்தார். ஆனால் சச்சின் சிங் கடந்த 16ஆம் தேதி இரவு தனது அறைக்கு சென்றுவிட்டு வெளியே வரவில்லை. ஹோட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்த போது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தற்கொலை குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை.
 

 

Tags :

Share via