பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!..

by Admin / 25-12-2021 03:02:50pm
பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!..

நமது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை தான் ஒரு வருடம் என்கிறோம். மேலும் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதனை வினாடிகளில் சொல்வதென்றால் 86400 வினாடிகள் ஆகும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி வேகமாக சுழன்றுள்ளது. 

அதாவது முன்பு ஒரு வருடம் என்பது 420 நாட்களை கொண்டதாக இருந்துள்ளது. தற்போது அதன் சுழலும் வேகம் குறைந்துள்ளதால், 365 நாட்களை கொண்ட ஒரு வருடமாக உள்ளது.  

இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சாதாரன மற்றும் டிஜிட்டல் கடிகாரங்களில் ஒரு வினாடி மாறுபாட்டினை கண்டறிவது என்பது இயலாத காரியம். விஞ்ஞானிகள் இதனை அணிக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.அணு கடிகாரம் மிகவும் துல்லியமானது மற்றும் முழுமையான பூஜ்ஜியத்திற்கு குளிரூட்டப்பட்ட அணுக்களில் எலக்ட்ரான்களின் இயக்கத்தை அளவிடுகிறது. 


விஞ்ஞானிகளால், 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை லீப் விநாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சியில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். 

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதனால், விஞ்ஞானிகள் அணு கடிகாரத்தை 1 வினாடி குறைக்க வேண்டும் என இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் தெரிவித்துள்ளார். 

மேலும் பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 


 

 

Tags :

Share via