செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க பாஜக போலீசில் புகார்.

by Editor / 27-07-2024 07:02:31am
செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்க பாஜக போலீசில்  புகார்.

பாரதீயஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் தமிழ்நாடு மாநில செயலாளர் மருதுபாண்டியன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையகாவல் உதவி ஆய்வாளருக்கு இணையம் வாயிலாக புகார் மனுவை அனுப்பியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 23.07.24 அன்று பாவூர்சத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ராமச்சந்திர பட்டினத்தில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்கள் அரசின் சட்டங்களுக்கு எதிராக மோட்டார் சைக்கிளில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் வாகன பேரணி சென்றது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு முன் உதாரணமாக இருக்கக்கூடிய  தேசிய கட்சியின் மாநில தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாதது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129 ன் படி சாலையில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் ஆகையால் திரு செல்வப் பெருந்தகை அவர்கள் மற்றும் அவருடன் மோட்டார் வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாஜக சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்.சட்டம் என்பது சாமானியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சமமானது என்பதை நமது காவல்துறை நிச்சயம் நிலைநாட்டும் என்பதை நம்புகிறேன்.என அந்தமனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : காங்கிரஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக போலீசில் புகார்.

Share via