கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

by Staff / 30-05-2024 12:23:38pm
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. மேலும், இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags :

Share via