படகின் மீது கப்பல் ஏறியதில் 5 பேர் பலி! 100 பேர் மாயம்

by Editor / 23-03-2022 11:20:49am
படகின் மீது கப்பல் ஏறியதில் 5 பேர் பலி! 100 பேர் மாயம்

வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப் படகின்மீது ருபோஷி-9 எனும் சரக்குக் கப்பல் மோதியது. படகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சிலர் உயிரை காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். ஆனால் மிக வேகமாக சரக்குக் கப்பல் வந்ததால் அனைவரும் குதிக்கும் முன்னரே கப்பல் படகை மூழ்கடித்துவிட்டது.

பயணிகள் என்ன செய்வதென்று அலறத் துவங்கும்போது சரக்குக் கப்பலை அதன் கேப்டன் நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் படகை சில மீட்டர்கள் இழுத்துச் சென்று முழுமையாக மூழ்கடித்த பின்னர் தான் கப்பலால் நிற்க முடிந்தது. அருகில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த சிலர், இந்த அதிர்ச்சி சம்பவத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேரின் உடல்களை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். 22 பேர் பத்திரமாக கரைக்கு சேர்ந்துள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags : 5 killed in boat capsize 100 people magic

Share via