கடனை திருப்பிக் கேட்டு மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை

by Staff / 04-10-2023 04:02:58pm
கடனை திருப்பிக் கேட்டு மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 36). கூலி தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் (34) என்றமனைவியும், துர்க்கா (12), கீர்த்தி (9), கீர்த்தனா (9) ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.கதிரவன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த நடராஜன் (60) என்பவரிடம் ரூ. 5 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு கதிரவன் நடராஜனிடம் ரூ. 7 ஆயிரம் கொடுத்து கணக்கை முடித்துள்ளார்.எனினும் கடந்த 1-ந் தேதி மாலையில் நடராஜன் மீண்டும் கதிரவனிடம் தனக்கு தர வேண்டிய பணத்தை வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.இதனால் மனவேதனை அடைந்த கதிரவன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் கந்துவட்டி மிரட்டல் காரணமாக தான் தனது கணவர் உயிரிழந்ததாக அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். ‌

 

Tags :

Share via