விருதுநகரில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன
ராஜபாளையம் அருகே இஎஸ்ஐ காலடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துக்குமார் என்பவரது மனைவி வீரலட்சுமி கர்ப்பம் தரித்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வயிற்றில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் வீரலட்சுமி பிரசவம் பார்க்கப் பட்டது இதில் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன மூன்று குழந்தைகளின் ஆரோக்கியமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :