டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் வழங்கும் இந்தியா
கடுமையான டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா வழங்குகிறது .
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை 500 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவிடம் மாதாந்திர அடிப்படையில் எரிபொருள்களை கடனாக பெறுகிறது.
இந்நிலையில் அவசர பற்றாக்குறையை சமாளிக்க டீசல் வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை ஏற்று 40 ஆயிரம் டன் டீசல் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குகிறது.
உக்ரேன் விவகாரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரத்தன்மை இழப்பு முகம் சங்கிலி தடை உள்ளிட்ட காரணங்களுக்கு மத்தியில் இலங்கையின் கோரிக்கையை ஏற்று உடனடியாக டீசல் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
பொருளாதாரமாந்த நிலை சீரமைக்க இலங்கைக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான குறுகியகால கடனுதவி இந்திய வழங்கியது
Tags :