கிணற்றில் விழுந்தவரை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் குப்புறக்கவிழ்ந்து மீட்கபட்டவர் பலி
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் தோட்டத்திலுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.இதுவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் கிணற்றிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாலையில் குறுக்கே ஆடு ஓன்று வந்துள்ளது.அப்பொழுது அம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேக் போட்டதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் குப்புற கவிழ்ந்தது. இதில் கிணற்றில் தவறி விழுந்த மீட்கப்பட்ட சுப்பிரமணியன் பரிதாபமாக பலியானார்.ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடன் வந்த பொன்னம்பலம் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு உயிர் தப்பினர். இந்த விபத்துக்குறித்து குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : The ambulance that was loaded fell into the well and the rescued person died