இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் வருவதை கண்காணிக்கும் பணி தீவிரம்

by Staff / 28-03-2022 03:01:26pm
இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் வருவதை கண்காணிக்கும் பணி தீவிரம்

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கண்காணிக்கும் வகையில் நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் நவீன ஹோவர் கிராப்ட் படகு மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரிப்பதாலும் அங்குள்ள மக்கள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர் .

கடல் மார்க்கமாக படகு மூலமும் தனுஷ்கோடி கடற்கரை குடும்பத்துடன் வந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மேலும் பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரக்கூடும் என்பதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து மூலம் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு உணவு தங்கம் எரிபொருள் உள்ளிட்டவை  கடத்தப்படுகிறதா  எனவும் கடந்த ஒருவார காலமாக கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via