ஒகேனக்கல் அருவியில் 3 நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

by Editor / 10-06-2022 12:29:27pm
ஒகேனக்கல் அருவியில் 3 நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள்  மகிழ்ச்சி

 ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வந்த நிலையில் மழையின் காரணமாக  நீர்வரத்தும் அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்டு வந்த ஏராளமான  சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

தற்போது மழையில்லாததால்  ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியதால் ஒகேனக்கல் அருவியில் 3 நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு  இன்று முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக குளிக்கவும், படகு சவாரி செய்யவும் குளிக்கவும்  சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாள் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் கோடை விடுமுறை முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Tourists are happy with the lifting of the 3-day ban on Okanagan Falls

Share via