நாட்டுத்துப்பாக்கியுடன் 3பேர் கைது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் நாட்டு துப்பாக்கியை வைத்து ஒருகும்பல் வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அருண்குமார் என்பவர் அரசு அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவருடன் முப்புடாதி என்பவரது மகன் சிலம்பரசன், மாசானம் என்பவர் மகன் கனகராஜ் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து துப்பாக்கியை வாங்கி வைத்து வேட்டையாடச் செல்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலம்,ஐந்தருவி,பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிஎன்பதால் இந்த பகுதிகளில் மான்,மிளா,உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்துள்ளதால் இங்குவரும் முக்கிய புள்ளிகளுக்கு மான்,மிளா உள்ளிட்டவைகளை வேட்டையாடி விருந்து வைப்பதும் விற்பனை செய்வதும் குற்றாலம் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :