கன்னியாகுமரி மாவட்டம் பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் கைது.

by Editor / 08-04-2022 11:39:14am
கன்னியாகுமரி மாவட்டம் பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் ஜெயபிரகாஷ்-ஐ கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டை நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகை போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via