பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் - விக்கிரமராஜா

by Editor / 10-04-2022 07:37:38pm
பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் - விக்கிரமராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5ல் நடைபெறவுள்ள மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.முதல் முறையாக வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.இந்த மாநாடு வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வெற்றி மாநாடாக இருக்கும்.


தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க கடைகளுக்கு தான் அதிகாரிகள் வருகின்றனர் தவிர அது உற்பத்தி செய்யும் இடத்தில் தடுப்பதை விட்டு விடுவதாகவும், சமானிய வியாபாரிகளின் கடைகளை சீல் வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது


அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு உறுதியாக உள்ளது.

இந்து அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள கடைகளின் வாடகை பிரச்சினை இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட பொருள்கனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சீல் வைக்கமால் சிறு வணிகர்கள் கடையை சீல் வைப்பதனை கைவிட வேண்டும்,


பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம், விலையேற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை. 

கலப்படம் செய்பவர்களுக்கு நாங்கள் துணை போவது கிடையாது, அவ்வாறு செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,

எண்ணெணெய் வித்துகளில் மற்ற எண்ணெணெய்களுடன் கலப்பு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை தர உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via