வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை

by Staff / 28-04-2022 04:09:43pm
வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்ய தடை

இந்தோனேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உலக நாடுகளின் சமையல் எண்ணெய் விலை ஏற்கனவே கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வழங்கி உதவி செய்யவும் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். 27 கோடி மக்களின் எண்ணிக்கை நிறைவு செய்வதற்காகவே அரசின் முதல் முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பாமாயில் உற்பத்தி 60 விழுக்காட்டை கொண்டுள்ள இந்தோனேசியா அதில் முறையில் ஒரு பங்கை உள்நாட்டுத் தேவைக்கே பயன்படுத்துகிறது. ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடைவிதித்துள்ளது மீண்டும் உலக சந்தையில்  எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via