மர்ம சுரங்கப்பாதை இந்திய எல்லை அருகே கண்டுபிடிப்பு.

by Staff / 05-05-2022 01:25:48pm
மர்ம சுரங்கப்பாதை இந்திய எல்லை அருகே கண்டுபிடிப்பு.

இந்திய எல்லை ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியின், அருகே மர்ம சுரங்க பாதையை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த சுரங்கப்பாதை, போதைப் பொருள் கடத்தலுக்காகவா அல்லது கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரு    தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ இந்த குழியை பயன்படுத்தினாரா என வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முதல் நாள் ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டு நிலையில், இன்று தொடர்ந்து வீரர்கள் சோதனையில்  ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via