சத்துணவு திட்டத்தில் அரிசி, முட்டை, பருப்பு  உட்பட உலர் பொருட்கள் 

by Editor / 05-06-2021 05:54:17pm
சத்துணவு திட்டத்தில் அரிசி, முட்டை, பருப்பு  உட்பட உலர் பொருட்கள் 



தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சத்துணவு மூலமாக அரிசி, பருப்பு, முட்டை உட்பட உளர் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், அரசு பள்ளியில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கு அரிசி , பருப்பு , முட்டையுடன் உலர் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 

 

Tags :

Share via