திருப்பூரில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி

by Staff / 05-05-2022 04:35:00pm
திருப்பூரில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய மாணவி

தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது 10:15 மணிக்கு துவங்கிய தேர்வு சரியாக 12.15 க்கு நிறைவு பெற்றது முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். திருப்பூரில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஆம்புலன்சில் தேர்வு எழுத வந்தார் ரிதன்யா என்ற அந்த மாணவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வயிற்றில் உள்ள ரத்தக்குழாய் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி செவிலியர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதினார்.

 

Tags :

Share via