312 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா கோல்டு பேலஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

வங்கிக் கடன் மோசடி புகாரில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.மேலும் இந்தியன் வங்கி அளித்த புகாரில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் சுஜாதா, ஷரவன் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. 312 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் வங்கி நிர்வாகம் அளித்த புகாரில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. மோசடி புகாரில் தியாகராயநகரில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கடைகள் ஏற்கனவே ஜப்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :