அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது எதிர்த்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

by Editor / 20-07-2022 11:35:16am
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது எதிர்த்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 11 தேதி இருதரப்பினர் வன்முறையில் ஈடுபட்ட அதை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். இதனை அகற்ற கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கட்சி அலுவலக பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக இன்று பிற்பகலில் நீதிமன்ற தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via